சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Saturday, January 2, 2016

பொய்ப்பற்கள் .


                       பொய்ப்பற்கள்                            

                பற்கள் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும்போது மற்றும் நல்ல வரிசையில் பற்கள் அமையாத போது பல்செட் அல்லது போலி பற்கள் அணியும் வழக்கம் உள்ளது . இயற்கையான பர்களைபோன்றே போலி பற்கள் தயாரிக்கும் முறை இருந்தாலும் சிலர் தங்கப்பற்கள் அணிவதும் உண்டு . பழங்காலத்தில் வெள்ளிப்பற்கள் அணிந்தனர் .

               

                           விலங்குகளின் கொம்புகள் , தந்தங்களில் இருந்தும் பற்கள் செய்து பொருத்திக் கொண்டனர்.பிரெஞ்ச்காரர்கள் பீங்கானில் பொய்ப்பற்கள் கட்டிக்கொண்டனர் . 1770-ம்ஆண்டுகளில் அவர்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தினர் .வெவ்வேறு வண்ணங்களில் பீங்கான் பற்கள் தயாரித்து அணிந்திருந்தனர் . இன்னும் கூட சிலர் பீங்கான் பல்செட் அணிவது உண்டு.